வெள்ளி, 16 ஜூலை, 2010

மச்சி நாம கல்லூரில எழுதுன கவிதை கிறுக்கல்கள்

அன்பே -நான் இரவில்துங்கும் முன்
உன் பெயரைத்தான் கடைசியாக உச்சரிக்கின்றேன்
ஏன் தெரியுமா
என் மூடும் விழி மூடியே விட்டால்
கடைசியாக உச்சரித்தது -உன்
பெயராக இருக்கும் அல்லவா - அதனால் தான்
-மோகன் ராஜ் -


வாலிபரின் வாக்கும் கடலை
வஞ்சியரின் பேசும் கடலை
காளையரின் எண்ணம் கடலை
கல்லூரியில் எங்கும் கடலை.
-பாபு பிரசாத் -

ரோஜாவை பறிக்க சென்றேன் -
முள் எனும் வேலி
உன்னை காதலிக்க வந்தேன்
சாதி எனும் வேலி
-சதீஷ் -

உன் கூந்தல் பூஞ்சோலை
ஆம் !வண்டுகள் தேன் கெடைக்கும் என்று
எண்ணி ஏமாந்தன
அது போல் நானும் காதல்
கிடைக்கும் என்று எண்ணி ஏமாந்தேன் .
-திவாகர் -

வானத்தில் ஏழு நிறங்களை கண்டு கொண்டேன்
மலர்களில் பல்வேறு மனங்களை கண்டு கொண்டேன்
மனிதரில் வெவ்வேறு குணங்களை கண்டு கொண்டேன்
சாதியில் எத்தனை நிறங்கள் என கண்டு கொண்டேன்
அனால் ஒரு பெண்ணின் மனதை கண்டு கொள்ள முடியவில்லை
ஏன் இந்த ஏமாற்றம் ?
ஆம் ! காதல் என்பதே திண்டாட்டம் .
- மணிகண்டன் -

என் கண்கள் அழகான இயற்கையை தேடுகிறது
என் செவியோ இனிமையான சொற்களை தேடுகிறது
என் நாவோ சுவையை தேடுகிறது
என் மனதோ தொலைந்த என் இதயத்தை தேடுகிறது
-சரவண மூர்த்தி -


மச்சி நாம கல்லூரில எழுதுன கவிதை கிறுக்கல்கள் தான் இது எல்லாம் ,
என்னும் இருக்கு ,அப்றமா எழுதுறேன்

கருத்துகள் இல்லை: