வியாழன், 12 பிப்ரவரி, 2009

நம் அடுத்த "தலை" முறை

பாருங்கள் தமிழர்களே !மனித நேயம் மிக்க மவுனிகளே!

வட்ட நிலவென்றும் அதி காலை

கதிரென்றும்தேனென்றும் அமுதென்றும்

கொஞ்சி முத்தமிட்டு மகிழ்வோமே

குழந்தைகளின் அழகு முகத்தை கண்டு

இதனையும் கொஞ்சம் பாருங்கள்

சிங்கள பாசிச வெடி குண்டால்

முகம் சிதைந்து போன நம்

தமிழ் குழந்தையயை பாருங்கள்

அதனை சிதைக்க உதவிய வெடி குண்டை

வாங்குவதில் நம் வரி பணமும்,

இந்திய மூளையும் உள்ளதெனும்

உண்மையை சற்றே எண்ணிப்பாருங்கள் !

என்னதான் செய்ய போகிறோம்?!

சக மனிதனாக ?!

சக தமிழனாக ?!

புதன், 4 பிப்ரவரி, 2009

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

-மார்ட்டீன் நீய் மொல்லரு -
இதே நிலைதான் நாளை நமக்கும் தமிழர்களே