திங்கள், 26 ஜூலை, 2010

மனிதன்: india

மனிதன்: india

india

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.

இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர்.

இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.

இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.

இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.

இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

---
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.





இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
---
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.
மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது. அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!


---

இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.

---

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.

“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.

இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.

நன்றி: மக்கள் சட்டம்

செவ்வாய், 20 ஜூலை, 2010

ஜாதிக்கறை காக்கும் இந்தியா

ஜாதிக்கறை காக்கும் இந்தியா
நீக்கும் அயல் மண்

கவிஞர் கலி.பூங்குன்றன்

2001 ஆம் ஆண்டு தென்னாப்-பிரிக்காவின் டர்பனில் ஒரு முக்கியமான மாநாடு. இனவெறி, இனப்பாகுபாடு, காழ்ப்புணர்வு, சகிப்புத்தன்மை, வெறுப்பு குறித்து விரிவாக ஆராயும் மாநாடு அது. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து 40 அரசுசாரா அமைப்புகள் பங்குகொண்டன. அம்மாநாட்டில் இந்தியத் தரப்பிலிருந்து மிக முக்கியமான குரல் எழுப்பப்பட்டது. அதுதான் இந்தியாவில் நிலவும் பிறப்பின் அடிப்-படையிலான ஜாதியைப் பற்றியதாகும்.

ஜாதி உணர்வு என்பது இன ஒதுக்கலுக்குச் சற்றும் குறைந்த தீமையல்ல என்று எடுத்துக் கூறப்பட்டது. இந்தியாவில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை மாநாட்டு நிரலில் இணைக்க வேண்டும் என்று போராடினர். இது பெரும் சர்ச்சைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

அப்பொழுது இப்பிரச்சினையில் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு, இந்துத்துவா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாகும்.

மாநாட்டு ஆவணங்களில் இந்தியாவில் ஜாதித் தொடர்பான எந்தக் கருத்தும் பதிவாகாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டது. அது குறித்து எந்தவிதத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பார்த்துக்கொள்ளப்-பட்டது.

அதுதான் அப்படிப் போயிற்று என்றால், டர்பன் மாநாடு முடிவில் அதன் பின் தொடர்-பான செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்ய 2009 ஏப்ரல் 20 _ 24 நாள்களில் ஜெனிவாவில் அய்.நாவின் மனித உரிமைகளின் மாநாடு ஒன்றைக் கூட்டியது. இந்த மாநாடும் பழைய டர்பன் மாநாட்டின் கோலத்தோட முடிந்தது என்பது மகா வெட்கக்கேடு.

40 அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், இவர்களின் கருத்துகள் அம்பலம் ஏறாமல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) பார்த்துக் கொண்டது.

இந்தியாவில் உள்ள ஆட்சி பா.ஜ.க வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி அவற்றுக்குக் குறியெல்லாம் இந்துத்துவா நோயால் பீடிக்கப்பட்ட ஜாதிய நரம்புகளில்-தான் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது இதன் மூலம் வெளிப்பாடு.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி _ எனின் அந்நியர் புகல் என்ன நீதி என்ற பாரதிப் பார்ப்பானிலிருந்து பாரதியப் பார்ப்பான்கள்-வரை பாரதத்தாயின் ஜாதிப் பாஷாணம் வெளியில் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதிலே விடாப்பிடியாக உள்ளனர்.

உலகின் ஒரே இந்து நாடு என்று கூறப்பட்ட நேபாளம் எடுத்த முடிவு வேறு மாதிரியாக இருந்தது (இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது என்பது உண்மையே!) அய்.நா. வெளியிட்ட வேலை மற்றும் இருப்பிடங்களில் ஜாதிப்பாகுபாடு ஒழிப்பு குறித்த வரைவுக் கொள்கைக்கு முழு ஆதரவைத் தருவதாக நேபாளம் தெரிவித்தது. இது தொடர்பாக நேபாள அமைச்சர் ஜீத் பகதூர் டார்ஜீ கவுதம் கூறுகிறார்.

ஜாதி ஒழிப்புத் தொடர்பான மனித உரிமை அமைப்பின் ஆவணத்துக்கு முழு ஒத்துழைப்புத் தருவோம், ஜாதிப் பாகு பாடுகளுக்கு எதிரான அவர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு உதவுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேபாள அரசின் இந்தக் கருத்தியலுக்கு அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்-பிள்ளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார். ஜாதிப் பிரச்சினைகள் பெருமளவில் தாண்டவ-மாடும் நேபாளம் முக்கியத்துவம் வாய்ந்த குரலை எடுத்துக் காட்டியதை, அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

2009 மார்ச் மாதத்தில் அவர் இந்தியா வந்திருந்த போது இந்திய அரசிடம் வலியுறுத்தினார். ஜாதிப் பிரச்சினை இந்தியா-வின் தேசியப் பிரச்சினைகளில் ஒன்று. ஆதலால், தலைவர்கள் அதற்கு எதிராகப் போராட-வேண்டும். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தீண்டாமை ஒரு இனவெறிச் செயல் எனக் கூறியும் நவநீதம் பிள்ளை நினைவுப்படுத்தினார். (நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்கத் தமிழர்; தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

அய்.நாவின் ஆவணம் குறித்து அய்ரோப்பிய யூனியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜாதிப் பாகுபாடுகளைக் களைவதே அய்ரோப்பிய யூனியனின் முக்கியக் குறிக்கோள். இந்தப் பிரச்சினை தொடர்ந்தால் மனித உரிமை ஆணையம் எதிர்காலத்தில் இதற்கு எதிராக வரைவுக் கொள்கையைத் தயாரித்து அய்.நாவின் பொதுச் சபையில் தாக்கல் செய்யும். இரண்டா-வது ஜாதிப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று அய்ரோப்பிய யூனியனின் அறிக்கை கூறுகிறது.

உண்மையை ஒப்புக் கொள்ளும் உள்ளம் நேபாளத்திற்கு இருக்கிறது. ஜாதிப் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாணும் பொறுப்பும் அய்ரோப்பிய யூனியனுக்கு உண்டு.

ஆனால், ஜாதி அமைப்பாளர்களின் சின்னமான இந்துத்துவா நெருப்புடன் மோதும் மனப்பான்மையுடன் பிரச்சினைகளை அணுகு-கிறது. இந்தியப்பூனை தன்கண்களை இ-றுக மூடிக் கொண்டு, பூலோகம் இருண்டு விட்டது என்று கீச் மூச் சத்தம் கொடுக்கிறது.

யானைக் காலை மண் புதையலில் மறைத்துக் கொண்டால் அந்த நேரம் இல்லை என்று ஆகிவிடுமோ. ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிராகப் பிரிட்டனில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுப் பாரதியப் பார்ப்பனியம் இந்திய நாட்டின் முகத்தில் கரியை மிக அழுத்தமாகப் பூசிவிட்டது. இந்தியாவில் மனிதன் பிறக்கும்போதே ஜாதித் தொப்புள் கொடியோடு பிறக்கிறான். அவன் செத்துப் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடுகாடு_ சுடுகாட்டில்கூட ஜாதிப்-பாகு-பாடு உண்டு. இந்தியாவில் மனிதன் சாகிறான். ஆனால், அவனைப் பிறப்பில் பிடித்துக்-கொண்ட ஜாதி மட்டும் சாவதில்லை.

பல கோடிக்கணக்கான உடன் பிறப்புச் சகோதரர்களை இன்னமும் தீண்டத்தகாத மக்களாக வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்துக் கண்டனம் செய்ய மிஸ்டர் காந்திக்கு முகம் ஏது என்ற கேள்வியை நாக்கைப் பிடுங்குவதுபோலக் கேட்டார் இங்கிலாந்தின் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில். ஏதோ சந்து முனையில் அல்ல, பிரிட்டன் நாடாளுமன்றத்தி-லேயே இவ்வாறு பேசினார்.

சர்ச்சில் மீது கோபம் கொப்பளிக்கலாம்_ ஆனால், அந்தக் கோபத்தில் நியாயத்தராசு இல்லையே. இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த காகா கலேல்கர் தம் அறிக்கையில் (பக்கம் 40) இந்தியாவில் நிலவும் ஜாதிகளின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது இங்குதான் இருக்கிறது. பொருளா-தார முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாறிவிட்டால் _ ஜாதி ஒழிந்து விடும் என்கிறார்கள் சிலர் அந்த வாதம் தவறான-தாகும். ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்-பட்டோருக்குக் கல்வியில்லை_ உணவு இல்லை _ உடை இல்லை. இது பொருளாதார அமைப்பினால் வந்தது என்பது தவறு. ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும். பொருளா-தாரத்-தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்று-வதற்குரிய காரணமல்ல.

ஆசியன் டிராமா என்ற நூலை எழுதிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர் மர்தஸ் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். Caste is deeply entrenched Indian tradition and it could be removed only by a drastic surgery.

(இந்தியச் சமூகத்தில் ஜாதி என்பது மிகக் கடுமையாக ஊடுருவியுள்ளது. அறுவைச்சி-கிச்சை மூலம்தான் அதனை அகற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்றுதானே பொருள்.

நாடு, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்த நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?

வெள்ளி, 16 ஜூலை, 2010

மச்சி நாம கல்லூரில எழுதுன கவிதை கிறுக்கல்கள்

அன்பே -நான் இரவில்துங்கும் முன்
உன் பெயரைத்தான் கடைசியாக உச்சரிக்கின்றேன்
ஏன் தெரியுமா
என் மூடும் விழி மூடியே விட்டால்
கடைசியாக உச்சரித்தது -உன்
பெயராக இருக்கும் அல்லவா - அதனால் தான்
-மோகன் ராஜ் -


வாலிபரின் வாக்கும் கடலை
வஞ்சியரின் பேசும் கடலை
காளையரின் எண்ணம் கடலை
கல்லூரியில் எங்கும் கடலை.
-பாபு பிரசாத் -

ரோஜாவை பறிக்க சென்றேன் -
முள் எனும் வேலி
உன்னை காதலிக்க வந்தேன்
சாதி எனும் வேலி
-சதீஷ் -

உன் கூந்தல் பூஞ்சோலை
ஆம் !வண்டுகள் தேன் கெடைக்கும் என்று
எண்ணி ஏமாந்தன
அது போல் நானும் காதல்
கிடைக்கும் என்று எண்ணி ஏமாந்தேன் .
-திவாகர் -

வானத்தில் ஏழு நிறங்களை கண்டு கொண்டேன்
மலர்களில் பல்வேறு மனங்களை கண்டு கொண்டேன்
மனிதரில் வெவ்வேறு குணங்களை கண்டு கொண்டேன்
சாதியில் எத்தனை நிறங்கள் என கண்டு கொண்டேன்
அனால் ஒரு பெண்ணின் மனதை கண்டு கொள்ள முடியவில்லை
ஏன் இந்த ஏமாற்றம் ?
ஆம் ! காதல் என்பதே திண்டாட்டம் .
- மணிகண்டன் -

என் கண்கள் அழகான இயற்கையை தேடுகிறது
என் செவியோ இனிமையான சொற்களை தேடுகிறது
என் நாவோ சுவையை தேடுகிறது
என் மனதோ தொலைந்த என் இதயத்தை தேடுகிறது
-சரவண மூர்த்தி -


மச்சி நாம கல்லூரில எழுதுன கவிதை கிறுக்கல்கள் தான் இது எல்லாம் ,
என்னும் இருக்கு ,அப்றமா எழுதுறேன்

செவ்வாய், 13 ஜூலை, 2010

படித்ததில் பிடித்தது -நாம் சிந்திப்போமே .............?

உங்களுக்கு வாய் எதற்கு?
வாய்களை மூடித் தைத்துவிடுங்கள்
அரைத்த சத்துணவை உட்செலுத்தும்
அறிவியல் திட்டத்துக்கு
அள்ளிக் கொடுப்பார்கள்
அந்நியரை வெறுத்து அயல்தேசம் போன
அருமந்த எம் அடங்காத் தமிழர்கள்
மூச்சுப் போய்வர மூக்கு மட்டும் போதும்
முடிந்தவரை மூக்கை வைத்து உயிர்வாழுங்கள்
அல்லது
முட்டாள்களாக மடிந்து போங்கள்
அராஜகத்தின் விளக்கவுரையை
வியந்துகேட்டு மெய் சிலிர்க்க
உங்கள் காதுகள் இருக்கட்டும்
தலைநிமிர்ந்து ஒரு தமிழன்
தன் உரிமைபற்றிப் பேசிவிட்டால்
அவன் பேச்சு நிறுத்தப்படும் அவர்களது வீரத்தை
கண்டு களிக்க
உங்கள் கண்கள் இருக்கட்டும்
மனித இனத்தின் மகத்துவமே பேசும் சிந்தனை
அதை இழந்த நீங்கள்
முட்டாள்களாக மடிந்து போங்கள்
முனகல்கூட இல்லாமல்
முழுமையான பாசிசத்தின் துணையுடன்
முட்டாள்களாக மடிந்துபோங்கள்

ஞாயிறு, 11 ஜூலை, 2010

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

எப்போதெல்லாம் எரிபொருள் விலை உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பதே பல்லவியாய் திரும்பத்திரும்ப பாடப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. வருவாய் இழப்பு என்பதைத்தான் நட்டம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இருக்கின்றன. கடந்த 2009 – 2010 நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 10,200 கோடியும்; பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியும்; ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியும்; ஓ.என்.ஜி.சி 16,700 கோடியும்; கைல் 3,140 கோடியும் லாபமாக ஈட்டியுள்ளன. இந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திப்பதால் விலை உயர்வு என்பது யாரை ஏமாற்ற?

சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 77 டாலராக விற்கிறது. இதன்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் சற்றேறக்குறைய 34 ரூபாய் வருகிறது. இந்தக் கச்சா எண்ணெயிலிருந்துதான் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெயைப் பொருத்தவரை கழிவு என்பதே கிடையாது. பாரபின் மெழுகு போன்ற அனைத்துப் பொருட்களும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது சாலை போட பயன்படுத்தும் தாராகிறது. 34 ரூபாய் கச்சா எண்ணெயிலிருந்து பல பொருட்களைத் தயாரித்தும், பெட்ரோல் விலை ரூபாய் 55 வரை விற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பது எப்படி?

எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதற்கும், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவு உயர்வாய் விற்கப்படுவதற்கும் சர்வதேச அளவில் விலை ஏறுவதும் இறங்குவதும் காரணமல்ல. அது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் நிலை கொண்டிருக்கிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலையில் 51.25 விழுக்காடு வரிகள் தாம், அதாவது நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையில் பாதிக்கும் சற்று அதிகமாக வரியாகத்தான் கொடுக்குறோமேயன்றி பெட்ரோலுக்கான விலையாகவல்ல. மத்திய மாநில அரசுகள் வரியைக் குறைத்துக்கொண்டாலே விலை உயர்வுக்கு அவசியமில்லாமல் போகும். ஆனால் அரசுகள் தங்கள் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளையும், முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும் சமாளிப்பதற்கு பெட்ரோல் டீசல் மீது விதிக்கும் வரிகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. இப்படி கோடிகோடியாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசுகள், அதில் கொஞ்சம் மானியமாக தந்துவிட்டு அதனால் தான் நட்டம் என நாடகமாடுகின்றன.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், பெட்ரோலியப்பொருட்களுக்கு மானியம் தந்து மக்களைக் காப்பதுபோல் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரியாக அரசு பெறும் தொகையோடு ஒப்பிட்டால் மானியம் என்பது ஒன்றுமில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, முதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை வெளிப்படையாக சொல்வதில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கம்பனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்திருக்கும் சலுகை மட்டும் 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்கவரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகை மொத்தம் 4,19,786 கோடியாகும். அதாவது ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சம் கோடியை முதலாளிகளுக்கு மானியமாக அள்ளிக்கொடுத்துவிட்டு, பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் அந்நிறுவனங்கள் நட்டமடைகின்றன என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?